
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாணவர்களின்றிச் செயல்பட்டு வந்த அரசு தொடக்கப் பள்ளியில் 5 மாணவர்கள் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.
கோங்குடி ஊராட்சி அல்லம்பட்டியில் கடந்த 1996-ல் 50 மாணவர்களோடு தொடங்கப்பட்ட அரசு தொடக்கப் பள்ளியானது கடந்த 2018-ல் மாணவர்களின்றி மூடப்பட்டது. இதுகுறித்து 'இந்து தமிழ்' நாளிதழில் அதே ஆண்டு வெளியான செய்தியைத் தொடர்ந்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதோடு, ஒற்றை இலக்கத்தில் மாணவர்களும் சேர்க்கப்பட்டனர். எனினும், பள்ளிப் பராமரிப்பு மற்றும் கற்பித்தல் பணி முறையாக நடைபெறாததால் மீண்டும் மாணவர்களில்லாத சூழல் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

