
மதுரை விமான நிலையம் அருகே பெருங்குடி கண்மாயில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை பெருங்குடி பெரிய கண்மாய் அருகே கல்வெட்டு இருப்பதாக முதுகலை வரலாற்றுத்துறை மாணவர் சூரியபிரகாஷ் தகவல் அளித்தார். அதன்படி மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் து.முனீஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் லட்சுமணமூர்த்தி, ஆதிபெருமாள்சாமி ஆகியோர் கள ஆய்வு செய்தனர். ஆலமரத்து விநாயகர் கோயில் அருகே குத்துக்கால் பாதி புதைந்த நிலையில் கல்வெட்டு இருந்தது. இதனை ஆய்வு செய்ததில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு எனக் கண்டறியப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

