
பெண்ணின் கழுத்தில் குத்தியிருந்த 7.50 செ.மீ. நீளமான தையல் ஊசியைப் பாதுகாப்பாக அகற்றி அவரின் உயிரை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
கோவை, தியாகராய நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தற்கொலைக்கு முயற்சி செய்து, கழுத்து அறுபட்ட நிலையில் கடந்த நவம்பர் 2-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கழுத்தில் வெளிப்புறக் காயங்கள் இருந்ததால், முதலுதவி செய்தனர். தொடர்ந்து வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

