
கனமழையால் பாதிப்புகள் அதிகம் என்பதால் தமிழகத்திற்கு தேவையான நிதி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரையிலும் 2 லட்சம் ஏக்கர் பயிர் நாசம் ஏற்பட்டுள்ளதாகவும் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும்; பல கிராமங்களில் குடிசைகள் இடிந்து விழுந்துள்ளதாலும் தமிழகத்திற்கு தேவையான நிதி அளிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

