
ஓசூர் வனக்கோட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் அதி கனமழை காரணமாக வனத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரிகள் முழுவதுமாக நிரம்பி வழிகின்றன. இதனால் குதூகலமடைந்துள்ள வனவிலங்குகள், கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளை நாடி வரத்தொடங்கி உள்ளதால், வனவிலங்குகளின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, ஜவளகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த 7 வனச்சரகங்களில் கடந்த சில நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனச்சரகங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏரிகள், 50க்கும் மேற்பட்ட தண்ணீர்த் தொட்டிகள் ஆகியவற்றில் மழை நீர் நிரம்பி வழிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

