
பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி கரூரில் மாணவர்கள் மறியல், ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 78 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூரை அருகே வசித்த தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி கடந்த 19ம் தேதி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துக்கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுதொடர்பாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் பல்வேறு மாணவர்கள் அமைப்பு சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நேற்று ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

