
தமிழகம் முழுவதும் பூட்டிய வீடுகளை உடைத்துக் கொள்ளையடித்த அண்ணன், தம்பி உள்ளிட்ட நான்கு பேரைத் தஞ்சாவூர் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இவர்களிடமிருந்து 74 பவுன் நகைகள் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா உத்தரவின்படி, தனிப்பிரிவு ஆய்வாளர் மணிவேல் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன், தலைமைக் காவலர் உமாசங்கர், காவலர்கள் அருண்மொழி, அழகு சுந்தரம், நவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று (17-ம் தேதி) தஞ்சாவூர் டான்டெக்ஸ் ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

