
கீழடி அகழாய்வுக்கு நிலம் கொடுத்தவர்களுக்குப் பட்டா வழங்க அலைக்கழித்து வருவதோடு முதல்வரிடம் புகாரளிக்க முயன்றதையும் வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வுப் பணிக்கென 2019-ல் அவ்வூரைச் சேர்ந்த சிலர் இலவசமாக நிலங்கள் வழங்கினர். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அந்த நிலங்கள் சீரமைக்கப்பட்டு நில உரிமையாளர்களிடமே திரும்ப வழங்கப்பட்டன. நிலம் வழங்கியவர்களுக்குப் பட்டா மாறுதல் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய ஆவணங்களைப் பெற்று, துரிதமாகச் செய்து தரவேண்டும் என, அரசு செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஏற்கெனவே சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வருவாய்த் துறையினருக்கு அறிவுறுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

