
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தனர்.
தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதல் பெற்று மாணவர் சேர்க்கைக்கான பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 150 மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

