
தீபாவளி பண்டிகையையொட்டி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆதரவற்ற 201 குழந்தைகளுக்கு தங்கபாண்டியன் எம்எல்ஏ தனது மாத ஊதியத்தில் இன்று புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தார்.
ராஜபாளையம் பொன்னகரத்தில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இதேபோன்று, மருதுநகரில் உள்ள 'லைட்-ஆஃப் லைஃப்' குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களில் உள்ள 201 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன், தனது ஊதியத் தொகையில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்காக புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

