
சசிகலாவை எதிர்த்துத்தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு இன்று (அக். 25) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அமைப்பில் அதிமுக செயல்படுகிறது. தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து பேசி இதுகுறித்து முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

