
புதுச்சேரி வரலாற்றை பள்ளிகளில் 6,7,8 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு கற்றுத் தர தயாரான தகவல்கள் தொகுப்பு இரண்டரை ஆண்டுகளாக கல்வித்துறையில் அடைப்பட்டு கிடந்தது. இது விரைவில் நூல்களாக தயாராக உள்ளது. கடந்த 2007ல் நிறுத்தப்பட்ட இப்பணி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. தனிக் கல்வி வாரியம் இல்லை. அதனால், தமிழக பாடத்திட்டத்தை புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும், ஏனாமில் ஆந்திர பாடத்திட்டமும் பின்பற்றப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

