
குட்கா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகையின் நகலை வழங்கியது.
தமிகத்தில் குட்கா, புகையிலை, பான் மசலா போன்றவை 2013 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட நிலையில், சந்தையில் தொடர்ந்து விற்பனையாகி வந்தது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தமிழகத்தில் கிடைப்பதில் முந்தைய அதிமுக அரசின் அமைச்சர்களுக்கும், மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் வழக்கு, சென்னை 8-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

