
ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவத்தை ரங்கோலியாக வரைந்து புதுச்சேரியைச் சேர்ந்த பெண் மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகி. ஓவியப் பட்டதாரிப் பெண்ணான இவர் தேசத் தலைவர்கள் ஒவ்வொருவரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போதும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது வீட்டில் உள்ள அறைகள் முழுவதும் பிரம்மாண்டமான முறையில் அவர்களின் உருவங்களை ரங்கோலியால் வரைவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

