
வ.உ.சி.யின் சுதேசி கப்பல் அவரை வாழவைத்தது. ஆனால், ஆங்கிலேயர்கள் கொடுத்த இலவசம் அவரை வீழவைத்தது. எனவே, அந்தக் காலத்திலேயே இலவசம் பலபேரை வீழ்த்தி இருக்கிறது என்பதை தூத்துக்குடி மண் உணர்த்தி உள்ளது என்று தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி. உருவச்சிலைக்கு தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவருடைய வரலாற்றை விளக்கும் புகைப்படங்களைப் பார்வையிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

