
பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப்கார் சேவை நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று முதல் தொடங்கியது. இதனால் பக்தர்கள் மூன்று நிமிடத்தில் மலைக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியும்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்குச் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவை உள்ளன. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் அலையின்போது கோயில் மூடப்பட்டிருந்தது. மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில் திறக்கப்பட்ட நிலையில், படிப்பாதை, யானைப்பாதை வழியாக மட்டும் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் குழந்தைகள், முதியோர் அனுமதிக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

