
புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.200 கோடியும், அடுத்த நிதியாண்டில் ரூ.100 கோடியும் அளிக்க உள்ளது என்று பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை, பிரெஞ்சு ஆட்சியில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. கடற்கரைச் சாலையில் தலைமைச் செயலகம் தனியாக உள்ளது. தலைமைச் செயலகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்ட ரங்கசாமி தலைமையிலான அரசு முயன்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

