
தேர்தலுக்காகச் செலவழிக்கும் பணத்தை ஊராட்சிப் பணத்தில் இருந்து எடுக்க நினைத்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் தெரிவிக்கப்படும் என மாதனூர் இளைஞர்கள், கிராமத்தில் ஆங்காங்கே டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த மோதகப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்குச் சில நிபந்தனைகளை விதித்து அப்பகுதியின் முக்கிய இடங்களில் டிஜிட்டல் பேனர் மூலம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

