
கோயில் நிலம் தொடர்பாக உரிய விவரங்கள் இல்லாமல் பதில் மனுத்தாக்கல் செய்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்குக் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என இணை ஆணையர் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை என்னும் இடத்தில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக 400 ஏக்கர் நிலங்கள் இருந்த நிலையில், தற்போது ஏழு ஏக்கர் மட்டுமே கோயிலின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், கோயில் நிலத்தை அளவீடு செய்து எல்லை வரையறை செய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யக் கோயில் தனி அலுவலருக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

