
தமிழ்வழிக் கல்வி பயின்றோர்க்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடன் தமிழ் அமைப்புகள் முன்வைத்தன.
தமிழ்க் குயில் இலக்கியக் கழகம், தமிழ் எழுச்சிப் பேரவை, பம்பப் படையூர் இராசராசன் வரலாற்று மையம், குடந்தை இராசராசன் பண்பாட்டு மையம், சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழு, உத்ரா அறக்கட்டளை, தஞ்சைத் திருமூலர் தவமையம், குவைத், இலங்கை, கொரியா, பிரான்சு முதலிய நாடுகளின் தமிழ் அமைப்புகள், இலண்டன் பல்கலை தமிழ்த்துறை மீட்டுருவாக்கக் குழு ஆகியவற்றின் சார்பில் தமிழறிஞர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

