
‘நீட்’ தேர்வு தோல்வி பயத்தால் காட்பாடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 12-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வினால் மாணவர்களின் எதிர்காலம் சிதைந்து போவதாக அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவித்து, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

