
தனியார் நிறுவனங்கள், மக்கள் கட்டக்கூடிய ஜிஎஸ்டி வரியை அரசுக்குச் செலுத்தாமல் ஏமாற்றுகின்றன என்று வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மந்தையம்மன் கோயில் திடல் அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு நேரில் சென்று, அங்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

