
எம்‌ஜிஆரின்‌ பேரன்பைப்‌ பெற்றவர் புலவர்‌ புலமைப்பித்தன் என்று அவரது மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
பிரபல கவிஞரும், தமிழக அரசின் முன்னாள் சட்ட மேலவைத் துணைத் தலைவராகவும் இருந்த புலமைப்பித்தன் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 86. சமீபத்தில் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் குன்றியிருந்த புலவர்‌ புலமைப்பித்தன் சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்.08) காலை அவர் உயிர் பிரிந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

