
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் எனத் தெரியாது என்றும், திருத்தப்பட்ட இலக்கு நிறைவுத் தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் ஆர்டிஐ-ல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள தகவலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழத்தில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இடம் தேர்வில் ஏற்பட்ட மூன்றாண்டு போராட்டத்திற்குப் பின் 2018-ல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதாக அறிவிக்கப்பட்டது. 2019 ஜனவரி 27-ல் மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் தற்போது 31 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

