
மதுரை மாவட்டத்தில் உள்ள பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி கற்கும் வகையில் ரூ.500 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிளஸ் 2 மாணவர்கள் உயர் கல்வி கற்க கல்விக் கடன் வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மத்திய அரசின் கல்விக்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.பி., ஆட்சியர் எஸ்.அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், முதன்மை வங்கி மேலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

