
தமிழகம் முழுவதும் படகு குழாம் உள்ள சுற்றுலாத் தலங்களில் படகு சவாரி தொடங்கிய நிலையில் மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் தண்ணீர் கடல் போல் நிரம்பியிருந்தும் படகு சவாரி தொடங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மதுரையில் பொதுமக்கள் குழந்தைகளுடன் அதிக அளவு செல்லக்கூடிய முக்கிய சுற்றுலாத் தலமாக வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளம், இந்து அறநிலையத்துறை வசமிருக்கிறது. இந்த தெப்பக்குளத்தில் படகு சவாரி செயல்பட்டுக் கொண்டிருந்தது. குழந்தைகள், பெரியவர்கள், படகு சவாரி செய்து தெப்பக்குளத்தின் அழகைக் கண்டு ரசிப்பார்கள். கரோனா ஊரடங்கால் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதால் தெப்பக்குளம் படகு குழாமும் மூடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

