
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், 30 ஆண்டு பழமையான வேப்பமரம் மறுநடவு செய்யப்பட்டது.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பூங்காவின் முன்புறம் 30 ஆண்டு பழமையான வேப்பமரம் உள்ளது. அந்த இடத்தில் பொன் விழா நுழைவுவாயில் அமைக்கப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், அந்த மரம் அகற்றப்பட வேண்டியிருந்தது. அந்த மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்க, 'பர்லாபிங்' என்ற முறையைப் பயன்படுத்தி, அந்த மரத்தை வேருடன் எடுத்து, வேறு இடத்தில் மறுநடவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த மறுநடவு செய்யும் பணி நேற்று (ஆக.19) பல்கலைக்கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

