
உதகை நகராட்சி மார்க்கெட் கடைகளில் வாடகை பாக்கி பிரச்சினையால் மொத்தமுள்ள 1,587 கடைகளில் 1,395 கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் இறங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி மார்க்கெட்டில் உள்ள 1,587 கடைகளுக்கு வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் கடந்த 4 ஆண்டுகளாகக் கடை உரிமையாளர்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வாடகையைச் செலுத்தாமல் உள்ளதால் நகராட்சிக்கு ரூ.38.70 கோடி வாடகை நிலுவைத் தொகை உள்ளது. இதனால் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது போன்றவற்றில் நகராட்சி நிர்வாகத்துக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

