
கல்லூரியில் மாணவர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாப்‌ பணியாளர்கள் என அனைவருக்கும் கட்டாயத் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்‌ மற்றும்‌ ஆசிரியரல்லாப்‌ பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகள் அனைத்தும் செப்டம்பர் 1-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், கோவை மண்டல‌க் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், கல்லூரிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். அதில் கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ சுயநிதிக் கல்லூரிகளும் கட்டாயம்‌ பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

