
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே ரயில் பாதை ஓரத்தில், பொம்மை ரூபாய் நோட்டுகள் இறைந்து கிடந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் -பெங்களூரு ரயில் பாதையில் சேலம் மாவட்டம் காருவள்ளி ரயில் நிலையத்திற்கும் தருமபுரி மாவட்டம் தொப்பூர் ரயில் நிலையத்துக்கும் இடையே குண்டுக்கல் என்ற பகுதி அருகே ரயில் பாதை ஓரம் ரூ.2000 மற்றும் ரூ.500 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இறைந்து கிடந்தன. ரயில்வே பாதை கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் அப்பகுதிக்கான 'கீ மேன்' இன்று காலை அப்பகுதி வழியாகச் சென்றபோது இந்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

