
கோவை அன்னூரில் விஏஓ அலுவலகத்தில் விவசாயி தாக்கப்பட்ட வழக்கு மற்றும் கிராம உதவியாளர் காலில் விழுந்த விவகாரம் தொடர்பாக, வீடியோ எடுத்த நபர் மீது அன்னூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அலுவலகத்துக்கு கடந்த 6-ம் தேதி, தனது நிலம் தொடர்பான ஆவணங்களைப் பார்க்கச் சென்ற விவசாயி கோபால்சாமியை, அங்கிருந்த கிராம உதவியாளர் முத்துசாமி தாக்கினார். அதன் பின்னர், கோபால்சாமியின் காலில் விழுந்து முத்துசாமி மன்னிப்பு கேட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

