
பழனி அருகே விவசாயி, தனது மனைவி, மகன், மகளுடன் மக்காச்சோளத் தட்டைப் போரில் தீப்பற்றிய நிலையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா, தற்கொலையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னராசு என்கிற முருகேசன் (52). இவரது மனைவி வளர்மதி (45), மகள் சிவரஞ்சனி (21), மகன் கார்த்திகேயன் (18). மகன் மற்றும் மகள் இருவருமே கல்லூரியில் படித்து வந்தனர். முருகேசனுக்கு ஜந்து ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

