
விடுபட்டவர்களுக்கும் பழங்குடியினர் சான்றிதழ் கிடைக்கச் செய்ய வேண்டுமென புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஆக. 5)வெளியிட்டுள்ள அறிக்கையில்: ‘‘புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இன பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் இருளர் மற்றும் அதன் உட்பிரிவுகளான வில்லி, வேட்டைக்காரர், மலைக்குறவன், மலகுறவன், காட்டு நாயக்கன், எர்குலா, குருமன், குருமன்ஸ் ஆகிய இனத்தைச் சேர்ந்வர்கள் மட்டுமே புதுச்சேரி அரசின் சாதிப்பட்டியலில் வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

