
மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதிலால் மேகதாது அணை விவகாரம் முடிவுக்கு வரப்போகிறது என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் தஞ்சாவூரில் இன்று (ஆக. 05) காலை மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதம் தொடங்கியது. உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார். போராட்டத்தில், பாஜக மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், ஜி.கே.நாகராஜ், கருப்பு எம்.முருகானந்தம், வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கார்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

