
கரடிகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கழுகுமலை அருகே கரடிகுளம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 1950-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கயத்தாறு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி 2003-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை 199 மாணவர்கள் (ஆங்கில வழியில்) படித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

