
‘சேலத்தில் இ-சேவை மையம் மூலமாக அரசு ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் புதியதாக மூன்று இ-சேவை மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்ரேஷன் வட்டாட்சியர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு அரசு ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க வருகின்றனர். ஆனால், இங்கு ஒரே ஒரு பணியாளர் மட்டுமே இருந்து, பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி, அவர்கள் கொண்டு வரும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து, அவர்களுக்குத் தேவையான விண்ணப்பங்களை நகல் எடுத்து வழங்கி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

