
புதுச்சேரியில் போதிய நிதி இருந்தும் அதிகாரிகள் அலட்சியத்தால் சுகாதாரத்துறையில் இரு மாத ஊதியம் வழங்காததால் ஒப்பந்த ஊழியர்கள் அவதியடைந்துள்ளனர்.
கரோனா காலத்தில் சுகாதாரத்துறையில் 294 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அதில் காரைக்காலில் 255 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு இரு மாதங்களாக ஊதியம் தரவில்லை என்று குறிப்பிடுகின்றனர். கரோனா பணியில் முழுமையாக ஈடுபட்டும் ஊதியம் தராத சூழல் நிலவுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

