
மதுரை மாநகராட்சியில் 2,500 தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால் தினமும் 20 சதவீதம் குப்பை தேங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரோனாவால் வருவாய் குறைந்ததால் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் மொத்தம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். இவர்களில் வெறும் 50,000 பேர் மட்டுமே நிரந்தரப் பணியாளர்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற பணியாளர்கள் எப்போதாவது பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் சொற்ப ஊதியத்திற்குப் பணிபுரிகிறார்கள். மதுரை மாநகராட்சியில் தற்போதுள்ள மக்கள்தொகை, வீடுகள் அடிப்படையில் 6 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், 3,500 பேர் மட்டுமே பணிபுரிகிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

