
ராமேஸ்வரம் அருகே அனுமதியின்றித் திருட்டுத்தனமாக 140 பனை மரங்களை வெட்டிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.
பனை மரத்தை வேரோடு வெட்டி விற்கவும், தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்ட நேரும் நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் என்று, தமிழக அரசின் வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில் ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

