
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 6 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கடலூரைச் சேர்ந்த கே.எஸ்.குருமூர்த்தி மற்றும் அர்ஜுனன் இளையராஜா ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் போன்ற மதங்கள் இருந்தாலும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களை முறைப்படுத்த அரசு எவ்வித அக்கறையையும் காட்டாத நிலையில், இந்துக்கள் வழிபடும் கோயில்களைக் கட்டுப்படுத்த மட்டும் அறநிலையத்துறை சட்டத்தைக் கொண்டுவந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

