
விருதுநகர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு ஆசிரியர் கரோனா தடுப்பூசி போடவில்லை என்றாலும் அப்பள்ளியைத் திறக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், அந்த ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட சுற்றறிக்கையால் ஆசிரியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பள்ளிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளைச் சுற்றறிக்கையாக அனுப்பி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

