
அதிகாரத்தைப் பகிர்ந்து தர திமுக எம்எல்ஏ, அரசு விழாவில் ஆளுநர் தமிழிசைக்குக் கோரிக்கை வைக்க, அதற்கு முதல்வர் ரங்கசாமியும், ஆளுநர் தமிழிசையும் பதில் தந்தனர்.
புதுச்சேரியில் 75-வது சுதந்திர தினத் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சார்பில் ’ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்னும் 75,000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா பாகூர் கொம்யூனில் உள்ள மணப்பட்டு கிராமத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

