
முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியில் தண்ணீர்த் திருடப்படுவதால் மின்சாரத் துறைக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பயனடையும் ஆயக்கட்டு விவசாயிகளைப் பாதிக்கும் தண்ணீர்த் திருட்டுப் பிரச்சினை தொடர்பாகவும், அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து நேரடியாக குழாய் வழியாக மதுரைக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

