
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியின் அனைத்து பெட்ரோல் நிலையங்கள் முன்பும் திரண்டுவந்த காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக 10 நாட்களுக்குத் தொடர்ந்து, கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரியில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் கண்டித்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க் முன்பும் கையெழுத்து இயக்கம் 7-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுச்சேரி முழுவதும் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு இன்று (ஜூலை 7) காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

