
தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வார் என மக்கள் சபை நிகழ்ச்சியில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்களைச் சந்தித்து மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மனுக்கள் பெறும் மக்கள் சபை நிகழ்ச்சி, கரூர் நகராட்சி 2-வது வார்டு பெரியகுளத்துப் பாளையத்தில் கடந்த வாரம் தொடங்கியது. 2-வது வாரமாக கரூர் நகராட்சி 1-வது வார்டு கோதூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் இன்று (ஜூலை 4-ம் தேதி) மக்கள் சபைக்கூட்டம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

