
“முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவசியமான பொருள்களைக் கூட வாங்குவதில் சிரமம் இருக்கிறது. அதேபோல் மாநிலத்தில் பொருளாதாரமும் சுணக்கம் அடைகிறது ஆகிய மூன்று காரணங்களால்தான் பல்வேறு தளர்வுகளை அறிவித்தோம். கரோனா இன்னும் முழுமையாக ஒழியவில்லை. ஆகவே, பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கரோனா தொற்றுப் பரவல் குறையாத நிலையில், பொதுமக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியம் குறித்துக் காணொலியில் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

