
கர்ப்பிணிகள் எந்தவிதத் தயக்கமுமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி போடுவதால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்தன. கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்தலாம் என, நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்த, மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

