
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். சுற்றுலாவை நம்பியுள்ளோர் வாழ்வாதாரம் இல்லாமல் விரக்தியடைந்துள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி முதல் மூடப்பட்டன. மாவட்டத்தில் கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தொற்றாளர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால், இன்று பொதுப் போக்குவரத்து தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் கிளைகளிலிருந்து 250 பேருந்துகள் 50 சதவீதப் பயணிகளுடன் இயக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

