
ஒருவழியாக ஊரடங்கில் ஒரே மாதிரியான தளர்வுகள் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, ஓட்டல்கள், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் தொடர் ஊரடங்கு மூலம் ஒவ்வொரு தொழிலுக்கும் துறைக்கும் ஒவ்வொரு விதமான கஷ்ட, நஷ்டங்கள். இதில் வித்தியாசமான நஷ்டங்களைச் சந்தித்த துறைகள் ஏராளமாய் இருந்தாலும், ஆப்செட் அச்சகத்தினருக்கான பாதிப்பு மிகவும் வித்தியாசமானது.
அதாவது கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, அடுத்ததாக புதிய அரசு பதவியேற்றவுடன் இன்னமும் கடுமையாக்கப்பட்டது. இந்த நேரத்தில் பொதுவாக தேர்தலில் வென்றவர்கள் மட்டுமல்ல, தோற்றவர்களும் கூட தனக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களுக்கு நன்றி சொல்லி போஸ்டர்கள் அச்சடிப்பது வழக்கம். அந்த வகையில் ஒரு தொகுதிக்கு வென்ற வேட்பாளர் மட்டும் குறைந்தபட்சம் 25 ஆயிரம் போஸ்டர்கள் அச்சடிப்பது உண்டு. தவிர அவரின் ஆதரவாளர்கள், விசுவாசிகள் ஆளுக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம் போஸ்டர்கள் அச்சடித்து தெருக்களில் ஒட்டி ஊரையே கலங்கடித்து விடுவார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

