
குழந்தைத் திருமணம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தமிழக அரசால் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என, தருமபுரியில் நடந்த அரசு விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தருமபுரியில் சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, இலவசத் தையல் இயந்திரம், திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா இன்று (ஜூலை 06) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி விழாவுக்குத் தலைமை வகித்தார். தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

